அனைத்து மாவட்டங்களிலும் பாசன வசதியின் கீழ் ஆண்டு முழுவதும். மழையை நம்பிய நிலையில் பருவமழை காலத்தில்.
மண்: அனைத்து வகையான மண்ணிலும் வளரும்.
தயாரிப்பு உழவு :
நல்ல பதமான மண் கிடைக்க 2 முதல் 3 முறை உழுது, 50 செ.மீ. இடைவெளியில் பார்கள் மற்றும் வாய்க்கால்கள் அமைக்கவும்.
நீர் மேலாண்மை : நடவு செய்த உடனேயும், 3-வது நாளில் உயிர்த் தண்ணீரும் பாய்ச்சவும். பின்னர் மண் வகையைப் பொறுத்து 10 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்யவும்.
அறுவடை : நடவு செய்த 90 நாட்களுக்குப் பிறகு முதல் அறுவடை, அதன் பிறகு 50 நாட்களுக்கு ஒருமுறை அடுத்தடுத்த அறுவடைகள்.
தீவன விதைகள் (1 கிலோகிராம் பேக்)
இது பல ஆண்டுகள் நிலைக்கக்கூடிய பசுந்தீவனப் பயிராகும், பல அறுவடை தன்மை கொண்டது, 3-3.5 ஆண்டுகள் வரை வளரும்.
புரதச்சத்து நிறைந்தது (20-22 %)
ஆடு, செம்மறி ஆடு, மாடு, முயல் & கோழிப்பண்ணைக்கும் நல்ல பசுந்தீவனம், எடை அதிகரிப்பையும் பால் உற்பத்தித் திறனையும் மேம்படுத்தும்.
விதை அளவு ஒரு ஏக்கருக்கு 7-8 கிலோகிராம் & முளைப்புத் திறன் 95 % ,
குறிப்பு: சிறந்த முளைப்புத் திறன் பெற, விதைகளை 80o செ. வெப்பநிலையில் சூடான நீரில் 5 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும் (கொதிக்கும் நீரை அடுப்பிலிருந்து இறக்கி 80o செ. வெப்பநிலை அடைய 4 நிமிடங்கள் வைக்கவும்). சூடான நீரில் பதப்படுத்திய பிறகு, விதைகளை குளிர்ந்த நீரில் கழுவி, ஒரு இரவு முழுவதும் குளிர்ந்த நீரில் ஊறவைக்கவும். விதைப்பதற்கு முன் விதைகளை நிழலில் உலர்த்தவும்.